search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுக்கடையில் மோதல்"

    வில்லியனூர் அருகே மதுக்கடையில் ஏற்பட்ட மோதலில் பலத்த காயம் அடைந்த தனியார் நிறுவன ஊழியர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் காலனியை சேர்ந்தவர் அழகப்பன் (வயது30). இவர் சேதராபட்டில் இன்டர்நெட் சென்டர் நடத்தி வருகிறார். இவருடைய நண்பர் பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த அய்யனார் (30) இவர் ஒதியம்பட்டில் உள்ள தனியார் மதுபான தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று மாலை இவர்கள் இருவரும் பிள்ளையார்குப்பம் கூனிமுடக்கு பகுதியில் உள்ள தனியார் மதுக்கடையில் மதுபாட்டில் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றனர். மதுபான கடை வாயிலில் இவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்ற போது அங்கு ஏற்கனவே மதுகுடித்து விட்டு மோட்டார் சைக்கிளை எடுக்க முயன்ற அதே பகுதியை சேர்ந்த சந்திரன் (30) மற்றும் இவரது நண்பர்கள் பாண்டியன், பாஸ்கர், அருள் ஆகியோருக்கும் இடையே மோட்டார் சைக்கிள்கள் உரசிக்கொண்டதால் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் இதுமோதலாக மாறியது.

    ஆத்திரம் அடைந்த சந்திரன் தரப்பினர் இரும்பு பைப்பாலும், தடியாலும் அழகப்பனையும், அய்யனாரையும் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அய்யனார் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து சந்திரனை கைது செய்தனர். மேலும் பாண்டியன், பாஸ்கர், அருள் ஆகிய 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

    புதுவை மதுக்கடையில் இருதரப் பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயம் அடைந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை குயவர்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யனாரப்பன் (வயது 28). இவர் புதுவை அண்ணா சாலையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருடைய நண்பர்கள் ராஜ்கிரண் (19), சந்தோஷ் குமார் (22). இதில், ராஜ்கிரண் கண்ணாடி கடையில் வேலை பார்த்து வந்ததால் அவரது நண்பர்கள் கண்ணாடி என்று பெயரிட்டு அழைப்பது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று இரவு அய்யனாரப்பன், ராஜ்கிரண் மற்றும் சந்தோஷ் குமார் ஆகிய 3 பேரும் சோனாம்பாளையத்தில் உள்ள ஒரு மதுக்கடையில் மது குடித்தனர். இவர்களது பக்கத்தில் மேலும் 3 வாலிபர்கள் மது குடித்து கொண்டிருந்தனர். அதில் ஒருவர் கண்ணாடி அணிந்திருந்தார்.

    அப்போது அய்யனாரப்பன் எப்போதும் கூப்பிடுவது போல் ராஜ்கிரனை ஏய் கண்ணாடி என்று கூறி பேசிக்கொண்டிருந்தார். ஆனால், பக்கதது மேஜையில் மது குடித்து கொண்டிருந்த கண்ணாடி அணிந்திருந்த வாலிபர் தன்னைத்தான் கண்ணாடி என்று கூறி கேலி செய்வதாக நினைத்து அய்யனாரப்பன் மற்றும் அவரது நண்பர்களிடம் கேட்டார்.

    இதனால் இருதரப் பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதில், ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்களும் ஒன்று சேர்ந்து அய்யனாரப்பனையும், அவர்களது நண்பர்களையும் சரமாரியாக தாக்கினர். மேலும் பீர் பாட்டிலை உடைத்து அய்யனாரப்பனை குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதில் காயம் அடைந்த அய்யனாரப்பன், ராஜ்கிரண், சந்தோஷ்குமார் ஆகிய 3 பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில், ராஜ்கிரண், சந்தோஷ்குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். அய்யனாரப்பன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ் பெக்டர் கீர்த்தி நாராயணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அய்யனாரப்பன் மற்றும் அவரது நண்பர்களை தாக்கிய வாலிபர்கள் வாணரப்பேட்டையை சேர்ந்த ஸ்ரீகாந்த் (28), நாகமுத்து (28) மற்றும் நைனார் மண்டபத்தை சேர்ந்த சிவகுருநாதன் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    புதுவையில் மதுக்கடையில் ஏற்பட்ட மோதலில் வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார்பாளையம் சரவணன் நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது26). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் நேற்று புதுவை சோனாம்பாளையத்தில் உள்ள ஒரு மதுக்கடையில் மதுகுடித்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு மதுகுடித்து கொண்டிருந்த வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த மீனவர் ராஜேந்திரனுக்கும், பிரபாகரனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரபாகரனை தாக்கினார். மேலும் ராஜேந்திரன் பீர் பாட்டிலை எடுத்து பிரபாகரனை குத்தினார். இதில் பிரபாகரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து ராஜேந்திரன் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகிறார்கள்.

    பாகூர் அருகே மதுக்கடையில் ஏற்பட்ட மோதலில் வாலிபரை பீர்பாட்டிலால் குத்திய 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    பாகூர்:

    பாகூர் அருகே குருவிநத்தம் சித்தேரியில் உள்ள ஒரு தனியார் மதுபான கடையில் மருதாடு கிராமத்தை சேர்ந்த மனநலம் பாதித்த 45 வயது பெண் துப்புரவு தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். நேற்று அந்த பெண் மதுக்கடையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட போது அங்கு மதுகுடித்து கொண்டு இருந்த குருவிநத்தம் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் (வயது23), ரமேஷ்(25), மற்றும் சாவடியை சேர்ந்த பிரகாஷ் (28) ஆகியோர் அந்த பெண்ணிடம் தகராறு செய்தனர்.

    அப்போது அந்த பெண்ணுக்கு ஆதரவாக நத்தப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (25) என்பவர் அந்த கும்பலிடம் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அய்யப்பன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து ராஜசேகரை சரமாரியாக தாக்கினர். மேலும் அய்யப்பன் பீர் பாட்டிலை உடைத்து ராஜசேகரை குத்தினார்.

    இதில் படுகாயம் அடைந்த ராஜசேகர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குபதிவு செய்து அய்யப்பன் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

    ×